Sunday, April 19, 2009

காதலியும் கல்லூரி தேர்தலும்

கல்லூரி தேர்தல் தொடங்கியது....
அனைத்து துறைகளிலும் தேர்தல் தேரோட்டம் தொடங்கியது......

உன்னை கவர நான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.....
ஆனால் நண்பன் தேர்தலில் அவன் போட்டியிட மனு தாக்கல் செய்தான் எனக்கு தெரியாமல்...
எங்கள் அணி அவனுக்காக தேர்தல் பனி செய்தோம்....
உன்னிடம் பேச ஒரு வாய்ப்பு பெற்றேன்...
இம்முறையும் தோல்விதான் எனக்கு....
நன்கு படிக்கும் மாற்று அணிக்கு மாணவிகளின் ஓட்டு..
பேராசிரியை உதவியுடன் எதிரணி வெற்றி கொண்டது...
எங்கள் அணி டெபொசிட் இழந்தது...
தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என வெறுமையாய் கூறினோம்...

தேர்தல் ஆய்வு என் அறையில் நெப்போலியன் முன்னிலையில் மெக்டொவெல் தலைமையில் தொடங்கியது.....
ஜனநாயகத்தில் வெற்றி கொள்ள முடியாது என புரிந்தது....

வெற்றி பெற்ற மாணவனை நண்பர்கள் ம்ச்டோவேல் உடன் சென்று மிரட்டி வாபஸ் பெற செய்தேன்... அவன் உனது நண்பன் என தெரியாமல்...
மேலும் உன்னிடம் வெறுப்பை சம்பாதித்தேன்...

துறையின் அனைத்து பொறுப்புகளுக்கும் மாணவர்கள் நியமிக்கபட்டனர்.....

நான் நமது துறையின் செயலாளர் பொறுப்பிற்கு நியமிக்கபட்டேன்.....
அச்சர்யம் ஆனால் உண்மை!!!!!...
நன்கு படிக்கும் மாணவர்கள் இருக்க நானா அந்த பதவிக்கு???
நண்பர்களின் உதவியால் நடந்தது இது??? ஒல்லி குச்சி நரசிம்மனுக்கு தம்பி உருவமுடைய எனது நண்பன் எனக்காக பேசியதால்..
ஆம் .. நான் கேட்ட பதவி கிடைத்தது....
ஆனால் நன்கு படிக்கும் மாணவர்களின் வெறுப்பும் கிடைத்தது.....

கல்லூரி பதவி வகுப்புகளின் வருகை பதிவேட்டை மாற்ற உதவியது...... நீ கல்லூரிக்கு வராத நாட்களில் உனக்காக வருகை பதிவேட்டை மாற்றினேன்...

நாட்கள் சென்றது....
நானும் கல்லூரிக்கு சென்று வந்தேன்... உன்னை பார்ப்பதை மட்டும் நிறுத்த முடியாமல்... நீ வராத கல்லூரியின் லைப்ரரி-இல் எனது பொழுதுகள் சென்றது...
கல்கியும் சாண்டில்யனும் எனக்கு பழகினர்... நானும் முதன்முதலா காவியங்களை படிக்க தொடங்கினேன்...

சாண்டில்யனின் படைப்புகளில் உன்னை தான் என்னால் பார்க்க முடிந்தது......
"அந்த நாட்களில் என்னால் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய முடியவில்லை .. உன்னை காதலிப்பதை தவிர"...


வெகு சிலர்க்கு மட்டுமே தெரிந்த எனது காதல் கல்லூரி முழுக்க உன்னால் தெரிந்தது... எனது காதலை வேடிக்கையாய் அனைவரிடமும் சொன்ன உன்னால் அனைவரும் என்னை வேடிக்கையாய் பார்த்தனர்...
நான் ஒரு சிரிப்பு மாணவன் ஆனேன்...

உனது அக்காவின் திருமணம் நிச்சியக்கப்பட்டது... வகுப்பில் இருந்த அனைவரையும் நேரில் அழைத்த நீ என்னை மட்டும் மறந்தாய்....
மீண்டும் ஒரு முறை நான் தோற்றேன் இதனால்...

ஆறாவது செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது..... எனது தோழியின் வற்புறுத்தலால் நானும் இம்முறை கொஞ்சம் படித்தது உதவியது...

எனது தந்தை ஓய்வு பெற்றார்....
வாழ்க்கை பயம் முதன்முதலாக எனக்கு வந்தது...