நீண்ட நாட்களுக்கு பிறகு எனது நண்பன் என்னை பார்க்க பெங்களூர் வந்தான்... எங்களின் வழக்கமான பயணம் தொடங்கியது..
நடு இரவில் ( காலை ஏழு மணி) எழுந்த நான் அவனை வரவேற்க சென்றேன்...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னை பார்த்த அவன் பிரமித்தான் என் உருவத்தால்...
எங்களது காலை பயணம் தொடங்கியது ஹோட்டல் தேடி.. கோரமங்களாவில் ஒரு ஹோட்டல்-ஐ கண்டு அங்கே சென்றேம்...
எங்களது மெனு பார்த்த ஹோட்டல் உரிமையாளர் சிறப்பு மரியாதையை கொடுத்தார்.. இட்லி.. பொங்கல்.. மசாலா தோசை.. இடியப்பம்.. தோசை.. பூரி என ஒவ்வொருவரும் சாப்பிட மொத்த ஹோட்டல்-உம் எங்களை வேடிக்கை பார்க்க எங்களின் சிற்றுண்டி முடிந்தது...
பிறகு எங்களின் பயணம் போரம் நோக்கி தொடங்கியது... இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பிறகு போரம் சென்றோம்....
கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது .... எங்கள் மீது எங்கள் நம்பிக்கையும் குறைந்தது.. வாழ்விஇன் நாட்களை வேஸ்ட் செய்து விட்டோம் என்று...
கண்களுக்கு கிடைத்த விருந்தினால் வயிற்றை மறந்த நாங்கள் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் மத்திய உணவினை பற்றி எண்ணினோம்....
இரவு முழுக்க இனிமையாக முடிய.....
நடு இரவில் ( காலை ஏழு மணி) எழுந்து ஆடு தண்டு காவேரி பயணம் தொடங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment